பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார்.
மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாரதம் நீதியை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல் அநீதிக்குப் எதிராகவும் பழிவாங்கியது.
இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக, தொலைதூரப் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விளக்குகள் ஏற்றப்படும்.
நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் வேரிலிருந்தே ஒழிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை.
சமீப காலங்களில், வன்முறைப் பாதையைக் கைவிட்டு, நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இது நாட்டிற்கு ஒரு பெரிய சாதனையாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு மத்தியில், நாடு சமீபத்திய நாட்களில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது.
நவராத்திரியின் முதல் நாளில், ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இந்த “ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்” (சேமிப்பு விழா) போது, குடிமக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைச் சேமித்து வருகின்றனர்.
பல நெருக்கடிகளைக் கடந்து செல்லும் உலகில், பாரதம் உறுதியையும், உணர்திறனின் அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் இருக்கிறோம்.
“விட்சித்” (வளர்ந்த) மற்றும் “ஆத்மநிர்பர் பாரத்” (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) என்ற இந்தப் பயணத்தில், குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.
“சுதேசி தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு பெருமையுடன் “இது சுதேசி!” என்று கூறுவோம். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை ஊக்குவிப்போம்.
அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம்.
நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து யோகாவை நடைமுறைப்படுத்துவோம்.
இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை “விட்சித் பாரதம்” (வளந்த நாடு) நோக்கி விரைவாக நகர்த்தும்.
ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றும்போது, அதன் ஒளி குறையாது, மாறாக அது மேலும் அதிகரிக்கும் என்பதை தீபாவளி நமக்குக் கற்பிக்கிறது.
அதே மனப்பான்மையுடன், இந்த தீபாவளியில் நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நேர்மறைத் தீபங்களை ஏற்றுவோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.