வேலுநாச்சியார்
வேலுநாச்சியார் உயிரிழந்த பிறகு 85 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் பிறந்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வரலாற்றைப் படிக்கும் போது ‘தென்நாட்டு ஜான்சி ராணி வேலுநாச்சியார்’ என்று படிக்கிறாய். நியாயமாக ‘வடநாட்டு வேலுநாச்சியார் ஜான்சி ராணி’ என்று வரலாறு பதிவாகியிருக்க வேண்டும்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, வரலாற்றில் தெளிவுபெறாத எந்த இனமும் எழுச்சியடைய முடியாது.
மருது சகோதரர்கள்
சோழ மன்னர்களுக்கு பிறகு மருது சகோதரர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைவித்து ஏற்றுமதி செய்தார்கள். அதனாலே அவர்களின் படையில் வேளாண்குடி மக்கள் சாரை சாரையாக சேர்ந்தனர்.
200 ஆண்டுகளில் சீமைக் கருவேலம், யூகலிப்டஸ் போன்ற நச்சு செடிகள், மரங்கள் வந்தது எப்படி? இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. நெல் விளைவித்து கொடுத்தால் அதை பாதுகாக்க முடியாத திராவிட அரசு, அதை தெருவில் போட்டு முளைக்க வைக்கிறது. நம் உழைப்புக்கு மரியாதை இல்லாமல் நமது நெல்லை தெருவில் போட்டது போல, ஒருநாள் இவர்களையும் நாம் தெருவில் போட வேண்டும் என்ற உறுதியை எடுத்தாக வேண்டும்.
வாக்கு செலுத்தும் போது தெருவில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்ததை நீங்கள் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும்.
சாராயம் எனும் நஞ்சு
சாராயம் எனும் நஞ்சை அரசு விற்பனை செய்கிறது. தீபாவளி நாளன்று ஒரே நாளில் ரூ. 290 கோடிக்கு மதுவை அருந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ‘எதற்காக இலவசம்?’ என்ற கேள்வி வருமா? வராதா?
டாஸ்மாக்கில் விற்கும் மதுவை உயர்ந்த கட்டடத்தில் அடுக்கி, குளிரூட்டி, கம்பி வலை போட்டு, சிசிடிவி கேமிரா, வாயிலில் இரண்டு காவலர்களை வைத்து பாதுகாக்கும் அரசை நீங்கள் எத்தனை நாளைக்கு பாதுகாக்கப் போகிறீர்கள்?
அந்த குடோனுக்குள்ளே மூடி கொளுத்தாமல், நீங்கள் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்?

ரூ.150 கோடியில் சமாதி
பரம்பரை வீரத்தை போற்றுவதால் வீரமிக்க தலைமுறை உருவாகும். தமிழன் அடிமையானதே போர்க்குணம் இல்லாமல் போனதால்தான். தன்னிடத்தில் இருப்பதை விட பிறரிடத்தில் இருப்பதே உயர்ந்தது என்ற இழிவான சிந்தனை… சகித்துக்கொள்ள முடியாத அளவு கடந்த திரைக்கவர்ச்சி… தன்னினப் பகை -இதுவே காரணம்.
அதைத்தான் ஜம்புத்தீவு பிரகடனத்தில் ‘அனைவரும் ஒன்றிணைந்துவருங்கள்’ என மருது வீரர்கள் அறிவித்தார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன்.
கடற்கரையில் ரூ.150 கோடியில் சமாதி கட்டி படுத்திருக்கும் அவர்கள் என்ன செய்தார்கள்?”
