தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேரக் கட்டுப்பாடு உள்ளது.
எனவே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது.

பட்டாசு கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டக்கூடாது எனவும், தனியாக சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை – செய்யக்கூடாதவை என்ற பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.