நேற்று முதல் பாலஸ்தீனத்தைத் தாக்கி வரும் இஸ்ரேல் – நெதன்யாகு என்ன சொல்கிறார்?|Why Israel attack Palestine now?


“நான் நிறுத்திய எட்டாவது போர் இது’ – இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும்.

நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு, ‘ஹமாஸ் தான் முதலில் தாக்கியது’ என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அந்த நாட்டின் அதிபர் நெதன்யாகு, ‘ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறார்.

இஸ்ரேல் தற்போதும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலினால் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள்

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள்

இந்தத் தாக்குதல் குறித்து ஜப்பானில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு தெரிந்தவரை, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்கியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை எதிர்க்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்று கூலாக பதிலளித்திருக்கிறார்.

தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது போர் நிறுத்தத்தை மீறுவதே ஆகும். இந்தத் தாக்குதல்கள் போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *