பள்ளிக்கரணை அழிவின் பின்னணி: அலட்சியத்தின் மூன்று முகங்கள் – அரசு விழிக்குமா?| The background to the destruction of Pallikaranai: Three faces of negligence – Will the government wake up?


எனவே, ராம்சார் ஒப்பந்தத்தின்படி, 2007 முதல் 2014 வரை மொத்தம் 4 G.O. வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சில ஆக்கிரமிப்புகள் இருந்தபோதிலும், 690 ஹெக்டேர் (அதாவது 1705 ஏக்கர்) சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு அரசு ஒப்படைத்துள்ளது.

தனியாரிடம் சதுப்பு நிலம்:

இதனைத் தவிர, 1375 ஏக்கர் சதுப்பு நிலம் பல்வேறு காலகட்டங்களில் அரசு துறைகளுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு தனியாருக்கும் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட நிலங்களில் ஒரு பகுதியே பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனம் சொந்தமாகக் கொண்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (சர்வே எண்: 453, 495, 496, 497, 498).

அறப்போர் இயக்கம் - ஜெயராமன் - சென்னை

அறப்போர் இயக்கம் – ஜெயராமன் – சென்னை

வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 1705 ஏக்கரும், மற்ற அரசுத்துறைகள் மற்றும் தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட 1375 ஏக்கர் சதுப்புநிலமும் என மொத்தம் 3080 ஏக்கர் நிலம் ஏப்ரல் 8, 2022 அன்று ராம்சார் நிலமாக அறிவிக்கப்பட்டது. அந்த 3080 ஏக்கர் நிலத்துக்கான வரைபடமும் தமிழ்நாடு ஈரநிலப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *