பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு
புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகளை துணைநிலை ஆளுநர் வரையறுக்கிறார். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெண்களை பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தடை விதிக்கப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் பெண்களை வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது….
