latest

ரூ.300 கோடி: நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகை; மூடப்படுகிறதா காமராஜர் பல்கலைக் கழகம்? – சீமான் கேள்வி | Rs.300 crore: Suspended dues; Is Kamaraj University being closed? – Seeman questions

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் விதி மீறலோடு பணியமர்த்தப்பட்டதாகக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம்…

Read More

2.05 கோடி பங்குகளை வெளியிடும் லென்ஸ்கார்ட் IPO.. ரூ.824 கோடியை ஈட்ட இலக்கு.!!

லென்ஸ்கார்ட் நிறுவனம் தனது ஆரம்பப் பொதுப் பங்களிப்புடன் (IPO) பங்குச் சந்தையில் களமிறங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பியூஷ் பன்சல், ‘ஷார்க் டேங்க் இந்தியா’ புகழ் மூலம் 2.05 கோடி பங்குகளை விற்பனை செய்து ரூ. 824 கோடி பெற உள்ளார். அக்டோபர் 31 அன்று திறக்கப்படும் இந்த ஐபிஓ-விற்குப் பிறகு, பன்சல் நிறுவனத்தில் 8.78% பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பார். இந்த ஐபிஓ-வில், பியூஷ் பன்சல் 2.05…

Read More

ஹெச்1பி விசா ஒரு SCAM.. திட்டமிட்டு நடக்கும் சதி.. கொந்தளித்த ஜேம்ஸ்.. யார் இவர்?!

ஹெச்1பி விசா தான் தற்போது அமெரிக்க கார்ப்ரேட் மத்தியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது, அமெரிக்க நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிலையான வளர்ச்சி, உலகளாவிய திறமைகளை அமெரிக்காவுக்கு கொண்டு வந்து வேகமாக வளர்ச்சி அடையவும், அதேநேரத்தில் செலவுகளை குறைக்கவும் முக்கியமான வழியாக இருந்தது ஹெச்1பி விசா. ஆனால் இந்த விசா அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் விஷயமாக உள்ளது என பிரபல முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். அமெரிக்க முதலீட்டு நிறுவனமான அசோரியாவின் (Azoria) நிறுவனர் மற்றும்…

Read More

Vodafone பங்குகள் உயர்வு.. DoT-யின் AGR கோரிக்கைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணை முன்பு ஏற்றம்.!

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருக்கும் AGR வழக்கு விசாரணைக்கு முன்னதாக உயர்வைச் சந்தித்தன. 2016-17 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கான தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரி, இந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, தீபாவளி…

Read More

தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி: மருத்துவர்களின் அலட்சியத்தால் அவலம்! | HIV in children affected by thalassemia: Doctors’ negligence causes suffering!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. அதாவது உடல் போதுமான அளவு ஹீமோகுளோபினை (Hemoglobin) உற்பத்தி செய்ய முடியாது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். அப்படி ரத்தம் மாற்று சிகிச்சையளிக்கப்பட்ட தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள் ஏழு பேருக்கு, எச்.ஐ.வி…

Read More

கூகுளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் Perplexity-இன் புதிய ஏஐ பிரவுசர்.. சவால் விடும் CEO..!!

கூகுளின் இணைய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், AI தேடல் ஸ்டார்ட்அப்பான Perplexity-யின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், மீண்டும் தங்கள் நிறுவனத்தின் புதிய ‘Comet’ AI பிரவுசரை பிரபலப்படுத்தி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளர். அதில், இணையம் என்பது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தமானதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட கூகுளின் குரோம்…

Read More

Vijay : 'உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பு!' – உடைந்த விஜய்; அப்செட்டில் முக்கிய நிர்வாகி!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்திலுள்ள ரெசார்ட்டில் விஜய் தனித்தனியாக சந்தித்து வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை விஜய் ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாமல்லபுரம் தனியார் விடுதி கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தவெகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்றே மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்துவிட்டனர். தனியார் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்திக்க காலை 8:30 மணியளவில் விஜய் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணியிலிருந்து அந்த…

Read More

இன்போசிஸ் சாயம் வெளுத்தது.. திங்கட்கிழமை நடந்த டிவிஸ்ட்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது பங்கு முதலீட்டாளர்களை தக்க வைக்கும் பொருட்டு கடந்த வாரம் வெளியிட்ட காலாண்டு முடிவில் ஈவுத்தொகையை அறிவித்தது. இந்த ஈவுத்தொகை பெறுவதற்காக மக்கள் ரெக்கார்டு தேதி வரையில் மக்கள் காதிருந்த நிலையில், இத்தேதி கடந்த நிலையில் இன்று அதிகப்படியான பங்குகள் விற்கப்பட்டு முதலீட்டாளர்கள் வெளியேற துவங்கியுள்ளனர். இன்போசிஸ் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் அதிகப்படியான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக எதிர்கொண்டு வருகிறது….

Read More

பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்.. ஒரே வாரத்தில் ரூ.46,687 கோடி லாபம்.. மிரட்டிவிட்ட அம்பானி..!!

கடந்த வாரத்தில், இந்தியப் பங்குச்சந்தையில் நிலவிய சாதகமான போக்கின் காரணமாக நாட்டின் முதல் 10 முன்னணி நிறுவனங்களின் கூட்டுச் சந்தை மதிப்பு ரூ. 1,55,710.74 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த டிசிஎஸ் (TCS) நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டி மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ரிலையன்ஸ் முதலிடம் : முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த வாரம் மட்டும்…

Read More

வேலைத் தேடும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.. AI வருகையால் காங்னிசண்ட் நிறுவன CEO எடுத்த அதிரடி முடிவு..!!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய வேலை சந்தையை மறுவடிவமைத்து வருவதால், காங்னிசண்ட் (Cognizant) நிறுவனம் தனது புதிய பணியாளர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மேலும் பல கல்லூரி மாணவர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாரம்பரிய தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தாண்டி, தற்போது கலை மற்றும் சமூக அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது பெருநிறுவன வேலைவாய்ப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, அதை…

Read More