அமெரிக்க பங்குச்சந்தையில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கே.. Nvidia செம மாஸ்..!!

அமெரிக்க நிறுவனமான என்விடியா, உலகின் முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு 4 டிரில்லியன் டாலர் என்ற சாதனையை படைத்த இதே நிறுவனம், இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஆப்பிள் 4 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்ற 3வது பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிலையில், இன்று என்விடியா புதிய சாதனையை படைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு, என்விடியா-வின் சிப்கள் மிகவும் முக்கிய தேவையாக மாறியிருக்கும் காரணத்தால்…

Read More

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? – TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் விகடனுக்கு அளித்த பேட்டி.

Read More

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது.. மத்திய அரசு உதவி நாடுவோம் – வானதி சீனிவாசன் Vanathi Srinivasan slams DMK government over VP program security arrangements

திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால்,…

Read More

விட்ராதடா தம்பி.. மாருதி சுசூகி போடும் மெகா திட்டம்.. கார் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!

இந்திய கார் விற்பனை சந்தையில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசூகி மோட்டார் எப்போதும் இல்லாமல் சமீப காலமாக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களான மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ்-ன் எழுச்சி ஹுண்டாய், கியா, ஆகியவைற்றின் பட்ஜெட் மாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால் மாருதி சுசூகி -யின் சந்தை பங்கீடு குறைந்துள்ளது. இந்த சந்தை பங்கீட்டை மீண்டும் உயர்த்தும் நோக்குடன், இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் எஸ்யூவி டிரெண்டுக்கு ஏற்ப…

Read More

கேரளா: பெண்களுக்கு மாதம் ரூ.1000 பென்சன் தேர்தலுக்காக 3 புதிய அறிவிப்பு வெளியிட்டார் பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்…

Read More

இந்தியா மீது 250% வரி.. டிரம்ப் மிரட்டல்.. தென்கொரியாவில் நடந்தது என்ன..?

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு தென்கொரியாவில் நடந்து வருகிறது, இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்க அதிபரான டிரம்ப் தென் கொரியாவுக்கு வந்துள்ளார். இவரின் வருகைக்கு முக்கியமான காரணம் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திக்கவும், இந்த சந்திப்பில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். இந்த நிலையில் Gyeongju-வில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் மத்தியிலான போரை நிறுத்தியது…

Read More

வீட்டு கடன் வட்டியில் பல லட்சங்களை சேமிப்பது எப்படி? – ஒரு சின்ன மாற்றம் செஞ்சா போதும்!!

இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய பெரும்பாலான மக்கள் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கி தான் சொந்த வீடு என்னும் கனவையே நிறைவேற்றுகிறார்கள். வீட்டு கடன் வாங்கி விட்டோம் என்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இஎம்ஐ தொகை கட்டாயம் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தியாக வேண்டும். வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் தோறும் அவர்களின் சம்பளத்தில் கணிசமான தொகை இஎம்ஐ -க்கு சென்றுவிடும். பொதுவாக நம் வாங்க கூடிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் போது நாம் வாங்கிய கடனை விட…

Read More

TVK: “நாங்கள் தலைமறைவாக இல்லை. அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும்” – தவெக ராஜ்மோகன் பேட்டி | Rajmohan met and spoke to the media after the Karur stampede incident.

தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதலும், மன்னிப்பும் தெரிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் தவெக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்க்க தவெகவின்…

Read More

மீண்டும் வேலையை காட்டும் தங்கம் !! நாளைக்கு தான் கச்சேரியே இருக்கு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சர்வதேச காரணிகள் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சென்னை பொறுத்தவரை கடந்த ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 97 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து கணிசமாக விலை குறைந்து நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 3…

Read More