தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது.
ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது.

தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் (Global dialogue) மாநாட்டில் அறிவித்துள்ளார்.
இந்த குழந்தைகள் நாடாளுமன்ற உறுப்பினார்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு “குழந்தையும்” ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனிப்பட்ட உதவியாளராக செயல்பட்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை பதிவு செய்வது, அமர்வுகளின் சுருக்கங்களை வழங்குவது, விவாதங்களின் போது பதில்கள் பரிந்துரைப்பது போன்றவற்றில் உதவும் என்று கூறப்படுகிறது.
