[ad_1]
அதே நேரத்தில் அங்கு ஒருவழிப் பாதையில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு அதிவேகமாக வந்தனர்.
காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் அவர்கள் நிற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
“காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.” என்று பாஜக-வினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். “இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க” வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
“எனக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. கோவை மக்கள் தான் என் பாதுகாப்பு” என்று சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
[ad_2]
