எல்லோருக்கும் நல்லவர்!

மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் 1945 பிப்ரவரி 16-ஆம் தேதி பிறந்த ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக, மாநிலங்களவை உறுப்பினராக, மாநில ஆளுநராக உயர்ந்த வரலாற்றுக்குப் பின்னால் கடினமான உழைப்பு மட்டுமே இருக்கவில்லை. தியாகம், கொள்கைப் பிடிப்பு, பொது வாழ்க்கையில் நேர்மை, தனிமனித ஒழுக்கம், தேசப் பற்று, தாய்மொழிப் பற்று என்று எண்ணிலடங்காத பல குணாதிசயங்கள் இல.கணேசனை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக உயர்த்திப் பிடித்தன. சாமானிய நடுத்தரக் குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இல.கணேசனின் தொடக்ககால…

Read More

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வாக்குரிமை யாத்திரையை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ஆம் தேதிமுதல்…

Read More

2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா இணை முன்னிலை

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், தற்போது இணை முன்னிலையில் இருக்கிறாா். அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா். முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான குகேஷை வென்ற பிறகு அடுத்த 5 சுற்றுகளிலுமே டிரா செய்திருந்த…

Read More

ஜம்மு – காஷ்மீரில் கனமழை – புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில். தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள். கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள். சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள். இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள். @-தினப்புயல்

Read More

அலா‌ஸ்கா ஆறு​த‌ல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான அலாஸ்கா பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லையென்றாலும், உலக நாடுகளின் பரவலான வரவேற்பை இந்தச் சந்திப்பு பெற்றிருக்கிறது. மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. டிரம்ப்-புதின் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. போர்நிறுத்தத்துக்கு உக்ரைன்- ரஷியா இரு நாடுகளும் தங்கள்…

Read More

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆக. 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதிவரை ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி…

Read More

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது இனி 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இது, இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் வரியிலிருந்து…

Read More

பழையன கழிதல்!

பல நூற்றாண்டுகள் கடந்தும் கல்லால் கட்டப்பட்ட கோயில்களும், கோபுரங்களும், கோட்டைகளும் இன்னும்கூட வலுவாக காலத்தைக் கடந்து வரலாற்று அடையாளங்களாகத் திகழ்கின்றன. ஆனால், கடந்த 150 ஆண்டுகளில் பொறியியல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு கட்டப்படும் கட்டடங்களும், பாலங்களும் தகர்வதும், வலுவிழந்து காணப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது. உலகளாவிய அளவில் கட்டடங்கள் இடிந்து விழுவதும், பாலங்கள் வெள்ளப் பெருக்கின்போதும், பெருமழைக் காலங்களிலும் அடித்துச் செல்லப்படுவதும் நிகழாமல் இல்லை. ஆனால், இந்தியாவில் அண்மைக்காலமாகப் பாலங்கள் தகர்வது என்பது தொடர் நிகழ்வாகவே இருப்பது கவலையை…

Read More

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஹைபிரிட் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும்,…

Read More

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள்,…

Read More