
எல்லோருக்கும் நல்லவர்!
மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் 1945 பிப்ரவரி 16-ஆம் தேதி பிறந்த ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக, மாநிலங்களவை உறுப்பினராக, மாநில ஆளுநராக உயர்ந்த வரலாற்றுக்குப் பின்னால் கடினமான உழைப்பு மட்டுமே இருக்கவில்லை. தியாகம், கொள்கைப் பிடிப்பு, பொது வாழ்க்கையில் நேர்மை, தனிமனித ஒழுக்கம், தேசப் பற்று, தாய்மொழிப் பற்று என்று எண்ணிலடங்காத பல குணாதிசயங்கள் இல.கணேசனை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக உயர்த்திப் பிடித்தன. சாமானிய நடுத்தரக் குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இல.கணேசனின் தொடக்ககால…