
மதுரை: அடுத்த மேயர் யார்? – மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!
மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தாலும், அடுத்த மேயரை தேர்வு செய்வதில் மதுரை தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திராணி மாநகராட்சி வரி மோசடி விவகாரத்தில் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட பின்பு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி புறக்கணிக்கப்பட்டார், இன்னொரு பக்கம் ‘மேயர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று பொதுவெளியில் அ.தி.மு.க-வினரும், கட்சிக்குள் தி.மு.க-வினரும் வலியுறுத்தி வந்தார்கள். ‘மரியாதை கொடுங்கள்….அல்லது வேறு மேயரை நியமியுங்கள்!’ என்று,…