ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-0, 6-1 என மிக எளிதாக, உள்நாட்டு வீராங்கனை அலிசியா பாா்க்ஸை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், சக ரஷியரான அனஸ்தாசியா பொடாபோவாவை எதிா்கொள்கிறாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-3, 6-0 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜூலிடா பரெஜாவை சாய்த்தாா். ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு…

Read More

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை… சாதனையுடன் முன்னேற்றம்!

லிவர்பூல் கால்பந்து அணி முதல்முறையாக தொடர்ச்சியாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மொத்தமாக ஹொம் (உள்ளூர்) மற்றும் அவே போட்டிகளில் 36 போட்டிகளில் கோல் அடித்து அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கின் சமீபத்திய போட்டியில் லிவர்பூல் அணி 3-0 என நியூகேஸ்டன் அணியை வென்றது. பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியனாக இருக்கும் லிவர்பூல் அணி தனது கிளப் வரலாற்றிலேயே முதல்முறையாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் ஒரு கோல்…

Read More

ஆண்டின் சிறந்த வீரர் விருது… அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!

எகிப்திய அரசன் கடந்த சீசனில் முகமது சாலா 29 கோல்கள், 18 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இதன்மூலம், பிரீமியர் லீக்கில் அதிகமுறை (20 முறை) சாம்பியனான அணியாக லிவர்பூல் எஃப்சி மான்செஸ்டர் யுனைடெட் உடன் சமன் செய்தது. பேலந்தோர் விருதுக்கான பட்டியலிலும் முகமது சாலா இடம் பிடித்துள்ளார். கால்பந்து ரசிகர்கள் இவரை செல்லமாக ’எகிப்திய அரசன்’ என அழைக்கிறார்கள். இந்நிலையில், பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளார். @-தினப்புயல்

Read More

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த சுனில் பெஞ்சமின் (32 வயது) முதல்முறையாக இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர் ஏஆர்எஃப்டி எனப்படும் ஆர்மி ரெட் கால்பந்து அணியில் விளையாடுகிறார். சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைக்கான 35 பேர்கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது….

Read More

அரையிறுதியில் டிரேப்பா்/பெகுலா ஜோடி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையா் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஜேக் டிரேப்பா்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா இணை புதன்கிழமை முன்னேறியது. நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனின் பிரதான சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. இந்நிலையில், இப்போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு கலப்பு இரட்டையா் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பாலும் முக்கியமான போட்டியாளா்கள் சோ்க்கப்பட்ட இப்பிரிவு, காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து தொடங்கியது. தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்னதாக காலிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்…

Read More

சீனியா் தேசிய தடகளம்: தமிழகத்துக்கு 3 தங்கம்

சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் தமிழக வீரா், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினா். ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு 10.22 விநாடிகளில் இலக்கை எட்டி, போட்டி சாதனையுடன் தங்கம் வென்றாா். கா்நாடகத்தின் மணிகண்டன் ஹோப்ளிதாா் வெள்ளியும் (10.35’), ராகுல் குமாா் வெண்கலமும் (10.40’) வென்றனா். கம்பு ஊன்றித் தாண்டுதலில் 3 பதக்கங்களும் தமிழா்களுக்கே கிடைத்தது. ஜி.ரீகன் 5.20 மீட்டரை எட்டி…

Read More

வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது. மாட்ரிட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரியல் மாட்ரிட்டுக்காக நட்சத்திர வீரா் கிலியன் பாபே 51-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்தாா். இதன் மூலமாக பாபே, ரியல் மாட்ரிட் அணியில் தனது 2-ஆவது சீசனை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறாா். @-தினப்புயல்

Read More

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்

கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றாா். முதல் சுற்றில், சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தாவிடம் தோல்வி கண்ட அவா், இந்த வெற்றியின் மூலமாக போட்டியில் தனது நிலையை மீட்டுக்கொண்டாா். இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் டூா் போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 5 பகுதிகளாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் 4 கட்டங்களான சூப்பா்பெட் ரேப்பிட் &…

Read More

ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகாா் மாநிலம் ராஜ்கிா் நகரில் வரும் 27-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே, கஜகஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரா்கள்…

Read More

ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு புதன்கிழமை 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன. ஸ்கீட்: இதில், ஆடவா் தனிநபா் ஸ்கீட் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். குவைத்தின் மன்சூா் அல்ராஷிதி 56 புள்ளிகளுடன் வெள்ளியும், கத்தாரின் அகமது அலி அல் இஷாக் 43 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா். ஸ்கீட் ஆடவா் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, பாவ்தேக்…

Read More