சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன்,

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
