கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து இன்று (அக்.28) பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்த்த பெண் ஒருவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
“நாங்க உள்ள போனதுமே என்ன மன்னிச்சிருங்கன்னு சொன்னாரு. அவர் கூட யாருமே அந்த ரூம்ல இல்ல. அவர் மட்டும்தான் இருந்தாரு.
